News December 4, 2024

பா.ரஞ்சித்துக்கு கட்டளையிட்ட சந்தோஷ் நாராயணன்

image

சினிமாவில் சண்டை போடுவதும் கூட ஒரு ஸ்கிரிப்ட் தான் போல. தொடர்ந்து ஒன்றாக படங்களில் பணியாற்றி வந்த பா.ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் திடீரென பிரிந்தார்கள். என்ன காரணமென ஒரு தகவலும் இல்லை. இடையில் பா.ரஞ்சித் “தங்கலான்” படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் பணியாற்றினார். இப்போது சமாதானம் ஆகிவிட்டது போல. இனி பா.ரஞ்சித் படங்களுக்கு நானே இசையமைப்பேன், இது என் கட்டளை என உரிமையுடன் சந்தோஷ் நாராயணன் பேசியிருக்கிறார்.

Similar News

News August 23, 2025

அட்லி-அல்லு அர்ஜுன் படம்.. Escape Mode-ல் தீபிகா?

image

அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்கும் படத்தின் ஷூட்டிங், கதை விவாதம் என்ற பெயரில் ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே போகிறதாம். ஃப்ளாப் பட்டியலில் தானும் சேரக்கூடாது என்பதற்காக அலர்ட் மோடில் இருக்கும் அட்லி, கதை விவாதக் குழுக்களை உருவாக்கி ஒவ்வொரு விவாதத்திற்கும் ஆஜராகிவருகிறாராம். ஏற்கெனவே கொடுத்த தேதிகளில் ஷூட்டிங் வைக்காததால், ‘எஸ்கேப் ஆகிவிடலாமா’ என்று தீபிகா படுகோன் யோசிப்பதாக கூறப்படுகிறது.

News August 23, 2025

விஜய் அபார சாதனை.. அரசியலில் புதிய வரலாறு

image

இந்திய அரசியல் வரலாற்றில் அதிக தொண்டர்கள் பங்கேற்ற மாநாடு(14.78 லட்சம்) என தவெகவின் மதுரை மாநாடு சாதனை படைத்திருப்பதாக Times of India தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பாஜக (11.86 லட்சம்), சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி(11.03 லட்சம்), தெலுங்கு தேசம் கட்சி(10.55 லட்சம்), பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி(5.13 லட்சம்) ஆகியவை இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. விஜய்க்கு கூடிய கூட்டம் ஓட்டாகுமா?

News August 23, 2025

வழக்கு சாட்சி: குழந்தைகளை பாதுகாக்க அரசு புதிய முடிவு!

image

வழக்குகளில் சாட்சியாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பாக குழு அமைக்க TN அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விதிமுறைகளை வகுக்க பல துறைகள் அடங்கிய குழு ஒன்றை விரைவில் அமைக்க உள்ளதாம். கோவையில் 8 வயது மகளின் கண்முன்னே அவரது தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொலையை நேரில் பார்த்த குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!