News December 4, 2024

மண்ணுளி பாம்புவிற்பனை செய்தால் கடும் நடவடிக்கை 

image

குமரி மாவட்ட வனத்துறை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மண்ணுளிப் பாம்பை விற்பனை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று சிலர் மண்ணுளிப் பாம்பை விற்பனை செய்வதில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் வன சட்டங்களுக்கு உட்பட்டு கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 18, 2025

குமரி: அலையில் சிக்கிய வாலிபர்

image

பெரியகாடு பகுதியை சேர்ந்தவர் ரசீத்குமார் (வயது 27) மாற்றுத்திறனாளியான இவர் நேற்று பெரியக்காடு கடற்கரைக்கு சென்றார். அப்போது அவர் அலையில் சிக்கிக் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News September 18, 2025

கன்னியாகுமரி பகவதி அம்மன் நவராத்திரி திருவிழா தேதி!

image

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலய நவராத்திரி திருவிழா வரும்  செப்.23ம் தேதி துவங்கி அக்டோபர் 2ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.  விழா நாட்களில் பல்வேறு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10ம் திருவிழா நாளான அக்டோபர் 2ம் தேதி  காலை அம்மன் வெள்ளி குதிரைவாகனத்தில் பரிவேட்டைக்கு புறப்படுதல், இரவு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு  ஆகியன நடக்கிறது.

News September 18, 2025

7524 மனுக்களுக்கு இதுவரை தீர்வு – ஆட்சியர்

image

குமரி மாவட்டத்தில் 15.07.2025 முதல் 16.09.2025 வரை 210 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு 1,05,305 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு சான்றிதழ், மின் கட்டண பெயர்மாற்றம், புதிய மின் இணைப்பு உள்ளிட்ட 7524 மனுக்களுக்கு இதுவரையிலும் தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!