News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News February 6, 2026
புளுகு மூட்டை திமுக: EPS

களத்திற்கு வந்து ஸ்டாலின் ஓட்டு கேட்டால் அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல, வெறும் 0 தான் என EPS கூறியுள்ளார். மத்திய அரசு போதிய நிதியை வழங்கவில்லை என மக்களுக்கு திமுக அல்வா கொடுக்கிறது என்ற அவர், ரயில்வே திட்டங்கள் வரவில்லை என புளுகு மூட்டைகளை அரசு அவிழ்த்து விடுவதாகவும் பேசியுள்ளார். மேலும், தான் வகிக்கும் பதவிக்கு உள்ள கௌரவம், மரியாதையை CM எண்ணிப்பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
ஹீமோகுளோபின் அதிகரிக்க இத குடிங்க போதும்!

ஹீமோகுளோபின் ரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட்டால், ரத்த சோகை பிரச்னை ஏற்படலாம். ஆதலால், உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, டாக்டர்கள் சில எளிய ஜூஸ்களை பரிந்துரைக்கின்றனர். அவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பாருங்கள். உங்களின் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News February 6, 2026
BREAKING: வேல்முருகன் விலக திட்டம்.. CM ஸ்டாலின் அதிர்ச்சி

திமுக கூட்டணியிலிருந்து தவாக விலக உள்ளதாக கூறப்படும் நிலையில், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற CM ஸ்டாலினின் நிகழ்ச்சியில் வேல்முருகன் ஆப்சென்ட் ஆனார். அண்மைக் காலமாக கூட்டணி நிலைப்பாட்டில் தனது கருத்தை மாற்றிய வேல்முருகன், கடந்த 3 நாள்களாக மா.செ.,க்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். அதில், பெரும்பாலானோர் திமுக கூட்டணியை விரும்பவில்லையாம். இதனிடையே, <<19063026>>தவாகவை கூட்டணியில் சேர்க்க அதிமுக<<>> அணுகுகிறது.


