News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News December 17, 2025

ஜெய்லர் 2-வில் ‘காவாலா’ பார்முலா வொர்க் ஆகுமா?

image

ரஜினியின் ஜெயிலர் படம் மெகா ஹிட் அடித்த நிலையில் அதே பார்முலாவில் பார்ட்-2 உருவாக்கப்படுகிறது. ஜெயிலர் படத்தை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்க்க ‘காவாலா’ பாடல் பெரும் பங்காற்றியது. அதேபோல் ஒரு பாடல் பார்ட் 2-விலும் நெல்சன் வைத்துள்ளாராம். அதில் நடிகை <<18578998>>நோரா ஃபடேஹி<<>> டான்ஸ் ஆடி கலக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத் கைவரிசை இந்த பாடலில் வொர்க் அவுட் ஆகுமா என பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

News December 17, 2025

கண்ணதாசன் பொன்மொழிகள்

image

*நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான் *கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம். *முதலில் யார் மீதாவது குற்றம் சாட்ட விரும்பினாள் உன் மீதே குற்றம்சாட்டிப் பழகு *உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்; உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும். *கர்மத்தை செய்ய முடியாதவனும், தர்மத்தை காக்க முடியாதவனும் வாழ்வதில் அர்த்தமில்லை

News December 17, 2025

3 மாதங்களில் இந்தியாவுக்கு வந்த 3-வது தாலிபன் அமைச்சர்

image

ஆப்கானிஸ்தானின் சுகாதாரத்துறை அமைச்சர் நூர் ஜலால் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லி வந்தார். இந்தியா – ஆப்கன் இடையே சுகாதாரத் துறையில் உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். மூன்று மாதங்களில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட மூன்றாவது தலிபான் அமைச்சர் இவர் என்பது கவனிக்கத்தக்கது. பாகிஸ்தானுடன் மோதல் போக்கை கையாளும் ஆப்கான் இந்தியாவுடனான தனது உறவை வலிப்படுத்தி வருகிறது.

error: Content is protected !!