News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News December 15, 2025

BREAKING: அறிவித்தார் செங்கோட்டையன்

image

வரலாறு படைக்கும் அளவிற்கு ஈரோட்டில் விஜய்யின் பரப்புரை கூட்டம் நடைபெறும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வரும் 18-ம் தேதி காலை 11 முதல் மதியம் 1 மணிக்குள் கூட்டம் நடத்தப்படும் எனவும், குடிநீர், ஆம்புலன்ஸ் என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் கூட்டத்திற்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News December 15, 2025

IPL: அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 10 வீரர்கள்

image

திறமையான வீரர்களை எந்த விலை கொடுத்தேனும் எடுத்துவிட வேண்டும் என IPL அணிகள் முனைப்பு காட்டும். அந்த வகையில், IPL ஏலத்தில் அதிகம் தொகைக்கு வாங்கப்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களின் போட்டோக்களையும் தொகையையும் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 15, 2025

ஜோர்டனில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த PM மோடி

image

அரசுமுறை பயணமாக ஜோர்டன் சென்றுள்ள PM மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு குழந்தைகளுடன் PM மோடி விளையாடி மகிழ்ந்தார். ஜோர்டன் மன்னரை சந்திக்கும் PM மோடி, இந்தியா – ஜோர்டன் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். ஈராக், UAE, சீனாவுக்கு அடுத்தபடியாக ஜோர்டனின் 4-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!