News December 4, 2024
ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.10,000 வழங்குக: ராமதாஸ்

ரேஷன் அட்டைதாரருக்கு தலா ரூ.10,000 வழங்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க அவர் கோரியுள்ளார். நெற்பயிர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 23, 2025
ரயில்வே தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு

அசாமில் உள்ள கோக்ரஜார் ரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில், ரயில் தண்டவாளம் மர்மநபர்களால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பாதையில் காலை 8 மணி வரை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. உடனடியாக அதிகாரிகள் பாதையை சீரமைத்ததால், மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படாத நிலையில், அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
News October 23, 2025
மரங்கள் ஒன்றோடு ஒன்று பேசும்; எப்படி தெரியுமா?

மரத்தின் வேர்கள் mycorrhizal பூஞ்சைகள் மூலம் பூமியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு மரத்தின் இலையை பூச்சிகள் சாப்பிட்டு அழித்தால், மரத்தின் வேரில் இருந்து ரசாயன சிக்னல்கள் வெளியேறும். பூஞ்சைகள் இந்த சிக்னலை மற்ற மரங்களுக்கு கடத்தும். இந்த சிக்னல்களை புரிந்துகொள்ளும் பிற மரங்கள் தங்கள் மரத்தின் இலைகள் பூச்சிகள் சாப்பிடாத படி கசப்பாக மாற்றும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. SHARE.
News October 23, 2025
BREAKING: முக்கிய அமைச்சரை தூக்குகிறாரா CM ஸ்டாலின்?

கனமழையால் சென்னை உள்ளிட்ட இடங்களில் வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளில் CM ஸ்டாலின், உதயநிதி சுழன்று சுழன்று பணியாற்றி வருகின்றனர். ஆனால், வருவாய் பேரிடர் துறை அமைச்சராக உள்ள KKSSR வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளில் சுணக்கம் காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. வரும் தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்க திமுக தலைமை ஆர்வம் காட்டவில்லை என்பதால், மக்கள் பணிகளில் சுணக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.