News December 4, 2024

பத்திரப்பதிவு: நாளை கூடுதல் டோக்கன்

image

நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக பத்திரம் பதிவு செய்யும் வகையில், கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய பத்திரப்பதிவு துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் அலுவலகம் உள்ள இடத்தில் 150 (முன்பு 100), 2 சார்பதிவாளர் அலுவலகம் உள்ள இடங்களில் 300 டோக்கன் (முன்பு 200) ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக 4 தட்கல் டோக்கன் ஒதுக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.

Similar News

News April 29, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் 29 – சித்திரை- 16 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: துவிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: வளர்பிறை.

News April 29, 2025

பிரபல இயக்குநர் ஷாஜி N கருண் காலமானார்

image

பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி N கருண் (73) உடல்நலக்குறைவால் காலமானார். மலையாள சினிமாவுக்கு தேசிய, சர்வதேச தளங்களில் பெருமை சேர்த்த இயக்குநர்களில் இவர் முக்கியமானவர். இவர் இயக்கிய Piravi (1988), vanaprastham (1999), kutty srank (2009) திரைப்படங்களுக்கு தேசிய விருதினை பெற்றவர். அதுமட்டுமல்ல, Piravi, Swaham, vanaprastham ஆகிய திரைப்படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வாகி பாராட்டுகளைப் பெற்றன.

News April 29, 2025

மகள் முன் தாய் பாலியல் வன்கொடுமை..இளைஞர் கைது

image

டெல்லியில் மகள் முன்பு, அவரின் தாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஸ்வரூப் நகரில் உள்ள பண்ணை வீட்டில் பெண்ணும், மகளும் இரவில் முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த பக்கத்து வீட்டுக்காரர் தர்மேந்தர், அந்தப் பெண், மகளை கயிற்றால் கட்டிப் போட்டார். பின்னர் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். புகாரின்பேரில் தர்மேந்தரை போலீஸ் கைது செய்துள்ளது.

error: Content is protected !!