News December 4, 2024
‘சூர்யா 45’ ஷூட்டிங்கில் த்ரிஷா

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. கோயில் செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்றைய படப்பிடிப்பில் நடிகை த்ரிஷா கலந்து கொள்வார் என திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ஸ்வாஸிகா, நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 29, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் 29 – சித்திரை- 16 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: துவிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: வளர்பிறை.
News April 29, 2025
பிரபல இயக்குநர் ஷாஜி N கருண் காலமானார்

பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி N கருண் (73) உடல்நலக்குறைவால் காலமானார். மலையாள சினிமாவுக்கு தேசிய, சர்வதேச தளங்களில் பெருமை சேர்த்த இயக்குநர்களில் இவர் முக்கியமானவர். இவர் இயக்கிய Piravi (1988), vanaprastham (1999), kutty srank (2009) திரைப்படங்களுக்கு தேசிய விருதினை பெற்றவர். அதுமட்டுமல்ல, Piravi, Swaham, vanaprastham ஆகிய திரைப்படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வாகி பாராட்டுகளைப் பெற்றன.
News April 29, 2025
மகள் முன் தாய் பாலியல் வன்கொடுமை..இளைஞர் கைது

டெல்லியில் மகள் முன்பு, அவரின் தாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஸ்வரூப் நகரில் உள்ள பண்ணை வீட்டில் பெண்ணும், மகளும் இரவில் முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த பக்கத்து வீட்டுக்காரர் தர்மேந்தர், அந்தப் பெண், மகளை கயிற்றால் கட்டிப் போட்டார். பின்னர் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். புகாரின்பேரில் தர்மேந்தரை போலீஸ் கைது செய்துள்ளது.