News December 4, 2024
30 பேர் பலி; 3,00,000 குடும்பம் தவிப்பு.. மலேசியா மழை துயரம்

மலேசியா, தெற்கு தாய்லாந்தில் வெளுத்து வாங்கும் மழையால் சுமார் 3,00,000 குடும்பங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றன. இதுவரை 30 பேர் பலியான நிலையில், 40,000 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மலேசியாவின் பட்டானி, சோங்க்லா, யாலா மாகாணங்கள் வரலாறு காணாத அழிவைச் சந்தித்துள்ளது. இந்த துயரிலிருந்து மீளக் குறைந்தது 224 மில்லியன் டாலர் செலவாகும் என அந்நாட்டுப் பிரதமர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 23, 2025
ஓரமாக நின்ற அண்ணாமலை.. ரிப்போர்ட் கொடுத்த நயினார்?

ஏற்கெனவே அண்ணாமலையை ஓரங்கட்டுவதாக TN பாஜக வட்டாரங்கள் கூறிவரும் நிலையில், நயினாரின் தேநீர் விருந்துக்காக சென்ற அண்ணாமலை தனியாக நின்று கொண்டிருந்தாராம். இதை கவனித்த அமித்ஷா, அவரை அருகே அழைத்துள்ளார். நயினார் உள்பட மூவரும் விருந்தில் பங்கேற்ற பின்பு தனித்தனியாக ஆலோசித்துள்ளனராம். இதனிடையே, அண்ணாமலை காலத்தில் பூத் கமிட்டி பணிகள் முழுமையடையவில்லை என நயினார் BL சந்தோஷிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளாராம்.
News August 23, 2025
முன்பு போல் என்னால் முடியவில்லை: சமந்தா

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதில் இருந்து மீண்டார். இதனைத் தொடர்ந்து, கணவரிடம் இருந்து பிரிந்தார். இவ்வாறு பல தடைகளைக் கடந்து வந்ததால், முன்பு போல் தற்போது தன்னால் இருக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில், ஒரே நேரத்தில் 5 படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் நெருக்கமான கதைகளில் மட்டுமே நடிப்பது, உடற்பயிற்சி ஆகியவையே பிரதானமாம்.
News August 23, 2025
RECIPE: உடலை வலுவாக்கும் பாசிப்பயறு கஞ்சி!

◆முடி, தோல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் இந்த கஞ்சி உதவும்.
➥பாசிப்பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, நட்ஸ் வகைகளுடன், சிறுதானியங்களை சேர்த்து சத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள்.
➥தானியங்கள் குறைவாகவும், பயறு வகைகள் அதிகமாகவும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
➥2 ஸ்பூன் அளவு மாவை எடுத்து, நன்கு கரைத்து உப்பு சேர்த்து, கஞ்சியாக்கி குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.