News December 4, 2024
59,000 வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கம்!

டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 59,000 வாட்ஸ்-அப் கணக்குகளை இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் முடக்கியுள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், “இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த 9.94 லட்சத்துக்கும் அதிகமான புகார்களின் மூலம் 3,431 கோடி பாதுகாக்கப்பட்டுள்ளது. 1,700க்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடிகள் முடக்கப்பட்டுள்ளன” என்றார்.
Similar News
News September 10, 2025
இந்தியா மீது 100% வரி விதிக்க வேண்டும்: டிரம்ப் வலியுறுத்தல்

இந்தியா, சீனா நாடுகள் மீது ஐரோப்பிய யூனியன் 100% வரிவிதிக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் இவை என்பதால், இவர்களுக்கு அதிக வரி விதித்தால் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவார்கள். இதனால் ரஷ்யா அடங்கும் என்று அறிவுரைக் கூறியுள்ளார். இந்தியாவுடன் விரைவில் உடன்பாடு ஏற்படும் என்று கூறிய அடுத்த நாளே மாற்றிப் பேசுகிறார் டிரம்ப்.
News September 10, 2025
விஜய்க்கு திருமாவளவன் ஆதரவு

விஜய்யின் பிரசார பயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து இருந்தால், அது ஏற்புடையதல்ல என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்து, செயல் சுதந்திரம் உள்ளதாகவும், அந்த வகையில் விஜய்க்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், எந்த காரணத்துக்காக அவரின் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது (அ) காலம் தாழ்த்தப்பட்டது என்பதை தான் இன்னும் அறியவில்லை என்றும் அவர் கூறினார்.
News September 10, 2025
பைக்குகளின் விலை கணிசமாக குறைந்தது.. HAPPY NEWS

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு எதிரொலியாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் <<17669084>>ராயல் என்ஃபீல்ட்<<>> நிறுவனமும் 350CC பைக் மாடல்களின் விலையை குறைத்தது. இந்நிலையில், யமஹா, ஹீரோ நிறுவனங்களும் தங்களது பைக் மாடல்களின் விலையை குறைத்துள்ளன. எந்தெந்த பைக்குகளின் விலை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை மேலே போட்டோக்களை Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.