News March 22, 2024
நகராட்சியில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சொந்தமான இடத்தில் வேறொரு நபர் ஆக்கிரமித்து வீடு கட்ட தொடங்கியுள்ளார். இதுகுறித்து நகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று (மார்ச் 22) மாரியப்பன் நகராட்சி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Similar News
News April 18, 2025
நெல்லை: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RailMadad* என்ற அப்ளிகேஷனை இந்த <
News April 18, 2025
கொலை வழக்கில் முக்கிய பெண் குற்றவாளி கைது

நெல்லை, டவுன் தொட்டி பாலத்தெருவைச் சேர்ந்த முன்னாள் காவல் உதவி அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி கடந்த மாதம் 18-ம் தேதி இடப்பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நூர்நிஷா என்பவர் தலைமறைவாக இருந்தார். நேற்று (ஏப்.17) மேலப்பாளையத்தில் நெல்லை தனிப்படையினர் நூர்நிஷாவை கைது செய்தனர். அவர் நெல்லைக்கு அழைத்து வரப்படுகிறார்.
News April 18, 2025
ஜாகிர் உசேன் கொலை; 4 பேர் மீது குண்டாஸ்

நெல்லை டவுன் ஜாஹிர் உசேன் பிஜிலி என்பவரை நிலப் பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி என்ற முகம்மது தௌபிக், அக்பர்ஷா பீர் முகம்மது, கார்த்திக் என்ற அலிஷேக்(32) ஆகியோர், மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி, நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.