News December 3, 2024
தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

செங்கல்பட்டை சேர்ந்தவர் குருசாமி என்பவரின் மகன் ராகுல் (20) பிஎஸ்சி படித்துள்ளார். படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்ததாக தந்தை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு ராகுல் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நகர போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 9, 2025
செங்கல்பட்டுக்கு இன்று லீவு இல்லை

கடந்த ஜூலை 28ம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிபூர திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதிலாக ஆகஸ்ட் 9ம் தேதி பணி நாளாக ஈடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 9, 2025
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில்,அரசு துவக்கபள்ளிகளில், 1ம்வகுப்பில் கடந்தாண்டு 7,227மாணவர்கள் சேர்ந்தநிலையில், இந்தாண்டு 6,073 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். துவக்கபள்ளிகள்481, அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகள் 83, நடுநிலைபள்ளிகள் 189, அரசு உதவி பெறும்நடுநிலை பள்ளிகள் 27 என் மொத்தம் 782 பள்ளிகள் உள்ளன. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
News August 9, 2025
செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாம்பரம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், திருப்போரூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <