News December 3, 2024
என்ன செய்யப் போகிறது PSLV C59 ராக்கெட்?

ப்ரோபா-3 செயற்கைகோளுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மாலை 4.08 மணிக்கு PSLV C59 ராக்கெட் ஏவப்படுகிறது. பூமியில் இருந்து 60,500 கி.மீ தொலைவில் நிலை நிறுத்தப்படும் இந்த செயற்கைகோள்கள், சூரியனின் புறவெளிக் கதிர்களை ஆய்வு செய்து, உடனுக்குடன் அந்த தரவுகளை அனுப்பும். ராக்கெட்டை ஏவும் இறுதிக்கட்ட பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News April 28, 2025
IPL: GT முதலில் பேட்டிங்

இன்றைய ஐபிஎல் போட்டியில் GT, RR அணிகள் மோதவுள்ளன. இதற்கான டாஸ் வென்ற RR கேப்டன் ரியான் பராக், முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்திருக்கிறார். RCBயிடம் முதலிடத்தை தவற விட்டிருக்கும் GT அணி, இன்று அதனை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கும். அதேநேரம், 9-வது இடத்தில் இருக்கும் RR அணி, ஆறுதல் வெற்றியை நோக்கி தனது வீரர்களை களமிறக்கவுள்ளது.
News April 28, 2025
தங்க பத்திர திட்ட முதலீடு: RBI புதிய அறிவிப்பு!

2020 – 21-ம் நிதியாண்டில் தங்க பத்திர திட்டத்தில் (SGB) முதலீடு செய்தவர்கள் முன்கூட்டியே அவற்றை திரும்பப் பெறலாம் என RBI அறிவித்துள்ளது. இவ்வாறு விற்பனை செய்பவர்களுக்கு 1 யூனிட் (அ) 1 கிராம் தங்கத்திற்கு ₹9,600 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தங்க பத்திரங்கள் 8 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டவை. ஆனால் 5 ஆண்டுகள் முடிந்த உடனே அதனை விற்று பணமாக்கும் வாய்ப்பை RBI தற்போது அறிவித்துள்ளது.
News April 28, 2025
சென்னையில் பாகிஸ்தானியர் காலமானார்

சென்னையில் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானியர் காலமானார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டிருந்தன. இந்நிலையில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தானியர் உயிரிழந்தார். இறந்த நபரின் உடலையும், அவரின் தாயையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.