News December 3, 2024

செம்பரம்பாக்கம் போல் சாத்தனூரில் நடந்துள்ளது: PMK

image

சாத்தனூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறந்தது ஏன் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததை அறிந்த அரசு, முன்பே தண்ணீரைத் திறக்காமல், செம்பரம்பாக்கம் போல் சேர்த்து வைத்து ஒரே நேரத்தில் திறந்ததே 4 மாவட்ட பேரழிவுக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிகாலை 2.45 மணிக்கு மக்கள் தூங்கும் நேரத்தில் எச்சரிக்கை விடுத்ததாக அரசு பொய் கூறுகிறது என்றும் சாடியுள்ளார்.

Similar News

News August 23, 2025

தவெகவின் 3-வது மாநாடு எங்கே? எப்போது?

image

தவெக முதல் மாநாடு விழுப்புரத்திலும், 2-வது மாநாடு மதுரையிலும் நடைபெற்ற நிலையில், 3-வது மாநாடு கோவையில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுக, திமுக, பாஜக செல்வாக்காக உள்ளதால் அதனை தகர்க்க விஜய் அங்கு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேதிகள் இறுதியாகவில்லை என்றாலும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்த மாநாடு நடைபெறலாம் என சொல்லப்படுகிறது.

News August 23, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 436 ▶குறள்: தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. ▶ பொருள்: முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?

News August 23, 2025

₹64,000 சம்பளம்… 10,270 காலியிடங்கள்

image

IBPS கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆக.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள 10,270 கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் தமிழகத்துக்கு மட்டும் 894 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி, வயது: 20-28, பிரிலிமினரி & மெயின் தேர்வுகள் அடிப்படையில் ஆள்தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்யவும்.

error: Content is protected !!