News March 22, 2024
அமைச்சர் வாகனத்தில் சோதனை

கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடாம்பூண்டி கூட்டு சாலை பகுதியில் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் தீவிர சோதனையில் இன்று (மார்ச்.22 )ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக வந்த தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வா.வேலுவின் வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
Similar News
News October 26, 2025
கள்ளக்குறிச்சி: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

கள்ளக்குறிச்சி மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம். ஷேர்
News October 26, 2025
கள்ளக்குறிச்சி: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993-இல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம் <
News October 26, 2025
கள்ளக்குறிச்சி: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

சின்னசேலம் அருகே நைனார்பாளையத்தைச் சேர்ந்த நீலகிரி மின் ஊழியர் கொளஞ்சியப்பன் (47), தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். கனமழையால் வீட்டில் மின் விளக்குகள் எரியாத நிலையில், நேற்று மாலை மெயின் சுவிட்சை ஆப் செய்யாமல் சுவிட்ச் போர்டை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கியது. மயங்கி விழுந்த அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.


