News December 3, 2024
மின்சார பயன்: 125.44 பில்லியன் யூனிட்டுகளாக அதிகரிப்பு

நாடு முழுவதும் மின்சார பயன்பாடு நவம்பர் மாதத்தில் 125.44 பில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டு இதே மாத நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 5% அதிகமாகும். ஒருநாளின் அதிகபட்ச மின்சார பயன்பாடும் 204.56 GWஇல் இருந்து 207.42 GWஆக அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உங்கள் வீட்டில் நீங்கள் எவ்வளவு மின்சார யூனிட் பயன்படுத்துகிறீர்கள். கீழே பதிவிடுங்க.
Similar News
News September 10, 2025
USA வரி குறைய வாய்ப்பா? டிரம்ப் கூறிய விஷயம்

PM மோடியிடம் வர்த்தகம் குறித்து வரும் வாரங்களில் பேசவுள்ளதாக US அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். PM மோடியை நல்ல நண்பர் என குறிப்பிட்ட அவர், இருநாடுகளுக்கும் ஏற்றார் போல முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியா மீதான USA வரிக்கு அமெரிக்கர்களே எதிர்ப்பு தெரிவித்ததால் டிரம்ப் தற்போது இறங்கிவந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்தியா மீதான USA வரி குறைக்கப்படுமா? பார்ப்போம்..
News September 10, 2025
நயினாரிடம் எனது மொபைல் எண் உள்ளது: OPS சூசகம்

EPS-ஐ தவிர யாரை CM வேட்பாளராக அறிவித்தாலும் NDA கூட்டணியில் மீண்டும் இணையத் தயார் என்று TTV சிக்னல் கொடுத்துவிட்டார். இந்நிலையில், நயினார் நாகேந்திரனிடம் என்னுடைய மொபைல் எண் உள்ளது, அவர் என்னை அழைத்தால் சந்திக்க தயார் என்று OPS-ம் கூறியுள்ளார். இதனிடையே, டெல்லி சென்று திரும்பிய செங்கோட்டையனோ, அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து அமித்ஷாவிடம் பேசியதாக தெரிவித்துள்ளார். NDA கூட்டணி வலுப்பெறுமா?
News September 10, 2025
உடல் புத்துணர்ச்சியுடன் இருக்க இந்த மூலிகை தேநீர் குடிங்க!

செரிமானத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் புத்துணர்ச்சி பெறவும் மிளகுக்கீரை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
*கொதிக்கும் தண்ணீரில் புதிய 3 மிளகுக்கீரை இலைகளை போட்டு, 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
*நன்கு கொதித்தவுடன், இந்த நீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
*அதில் தேவைப்பட்டால், தேன் சேர்த்து குடிக்கலாம். SHARE IT.