News December 3, 2024
தென்பெண்ணையை திடீரென திறந்ததே காரணம்: EPS

முன் அறிவிப்பின்றி இரவில் தென்பெண்ணை ஆற்றில் 1.60 லட்சம் கன அடி தண்ணீர் திறந்ததே விழுப்புரம், கடலூர் வெள்ளத்தில் மிதக்க காரணம் என EPS குற்றம்சாட்டியுள்ளார். சேலம் கந்தம்பட்டி பகுதியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த அவர், MET விடுத்த எச்சரிக்கையை திமுக அரசு பொருட்படுத்தாமல் அலட்சியமாக கையாண்டுள்ளது எனவும், தூக்கத்தை தொலைத்து துயரில் இருக்கும் மக்களிடம் அரசு பொய் கூறிவருகிறது என்றும் கூறினார்.
Similar News
News September 10, 2025
இணக்கத்தை விரும்பும் தமிழகம்: ராஜகண்ணப்பன்

சில விஷயங்களில் மத்திய அரசு முரண்டு பிடிப்பதால், நாமும் முரண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது; ஆனால், மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்ற மனப்பான்மையே தமிழக அரசுக்கு உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் எனக் கூறிய அவர், நிதிநிலை மோசமாக இருந்தாலும் மக்களின் அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
News September 10, 2025
USA வரி குறைய வாய்ப்பா? டிரம்ப் கூறிய விஷயம்

PM மோடியிடம் வர்த்தகம் குறித்து வரும் வாரங்களில் பேசவுள்ளதாக US அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். PM மோடியை நல்ல நண்பர் என குறிப்பிட்ட அவர், இருநாடுகளுக்கும் ஏற்றார் போல முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியா மீதான USA வரிக்கு அமெரிக்கர்களே எதிர்ப்பு தெரிவித்ததால் டிரம்ப் தற்போது இறங்கிவந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்தியா மீதான USA வரி குறைக்கப்படுமா? பார்ப்போம்..
News September 10, 2025
நயினாரிடம் எனது மொபைல் எண் உள்ளது: OPS சூசகம்

EPS-ஐ தவிர யாரை CM வேட்பாளராக அறிவித்தாலும் NDA கூட்டணியில் மீண்டும் இணையத் தயார் என்று TTV சிக்னல் கொடுத்துவிட்டார். இந்நிலையில், நயினார் நாகேந்திரனிடம் என்னுடைய மொபைல் எண் உள்ளது, அவர் என்னை அழைத்தால் சந்திக்க தயார் என்று OPS-ம் கூறியுள்ளார். இதனிடையே, டெல்லி சென்று திரும்பிய செங்கோட்டையனோ, அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து அமித்ஷாவிடம் பேசியதாக தெரிவித்துள்ளார். NDA கூட்டணி வலுப்பெறுமா?