News December 3, 2024
18 மீனவர்களை கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, நெடுந்தீவு பகுதியில் மீன் பிடிக்க சென்ற காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 18 மீனவர்களையும், 2 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. காங்கேசன் துறையில் உள்ள முகாமிற்கு சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
Similar News
News August 23, 2025
ஜனாதிபதியை சந்தித்த சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்தார். சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) சென்று திரும்பிய அவர், அண்மையில் PM மோடியை சந்தித்தார். இன்று இஸ்ரோ தலைவர் வி.நாராணனன் உள்ளிட்டோருடன் சென்று ஜனாதிபதியை சந்தித்து, தன் விண்வெளி பயண அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது ககன்யான் உள்பட இந்திய விண்வெளி துறையின் எதிர்கால திட்டங்கள் வெற்றியடைய முர்மு வாழ்த்தினார்.
News August 23, 2025
வருகிறது FUTURE READY திட்டம்.. மாணவர்களுக்கு HAPPY NEWS

அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த FUTURE READY திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு சார்ந்த பாடங்கள் தொடர்பாக மாதந்தோறும் பயிற்சி அளிக்கப்படும். மேலும், தேர்வு நடத்தி மாணவர்களின் கல்வித் திறனை ஆசிரியர்கள் அறிய வேண்டும். இது மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். ரெடியா!
News August 23, 2025
போதை பழக்கத்தை தடுக்க புதிய முயற்சி: CBSE அறிவிப்பு

மாணவர்களிடையே போதை பழக்கத்தை தடுக்க, தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்புடன் (NCB), CBSE ஒப்பந்தம் செய்யவுள்ளது. இதன்படி, போதைப் பொருள்களை தடுப்பது குறித்து, நாடு முழுவதும் CBSE பள்ளிகளில் முதல்வர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் மாணவர்களிடம் போதைப் பழக்கத்தின் தீமைகள், பாசிடிவ் லைப்ஸ்டைலின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவர். தமிழக அரசும் இதை பின்பற்றலாமே?