News December 3, 2024
15 நகரங்களை ஒதுக்கீடு செய்யக்கோரும் TN அரசு

டெல்லியில் மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டாரை TN மினிஸ்டர் நேரு இன்று சந்தித்தார். அப்போது 100 cities programme for sustainable urban development initiatives” திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநிலத்திற்கு 15 நகரங்களை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். முன்னதாக நிர்மலா சீதாராமனிடம், ஜல் ஜீவன் திட்டத்தை 2028 வரை நீட்டிக்கவும், ஏற்கெனவே வழங்க வேண்டிய நிதியை தரக்கோரியும் வலியுறுத்தியிருந்தார்.
Similar News
News September 10, 2025
தேர்தல் வெற்றிக்கு மேஜிக் பண்ண போறோம்: பிரேமலதா

2026 தேர்தலில் தான் செய்யவுள்ள மேஜிக், கட்சியினர் அனைவரையும் வெற்றிபெறச் செய்யும் என பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா பேசியுள்ளார். கட்சியை நம்பி வந்த நிர்வாகிகளை அரசு பதவிகளில் கெத்தாக பார்க்கவேண்டும் என கூறிய அவர், பூத் கமிட்டியை முறையாக அமைக்கும் படியும் அறிவுறுத்தியிருக்கிறார். மேலும், ஜனவரியில் கடலூர் மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
இன்று மாலை 5 மணி வரை மட்டுமே.. மிஸ் செய்யாதீங்க

SC-ன் கட்டாய தகுதித் தேர்வு உத்தரவால், TET தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த செப்.8 உடன் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைய இருந்ததால், பலரும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயற்சிக்கும் போது சர்வர் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து, நீட்டிக்கப்பட்ட கால அவகாசம், இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. உடனே விண்ணப்பியுங்கள்
News September 10, 2025
RECIPE: உடல் கொழுப்பை கரைக்கும் சிறுதானிய இட்லி!

இதய ஆரோக்கியம் மேம்பட, உடல் கொழுப்பு குறைய தினை இட்லி உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
*தினையை அரிசியுடன் சேர்த்து நன்கு கழுவி, 2 மணிநேரம் ஊற வைக்கவும். *இவற்றுடன் உளுந்தம் பருப்பையும் வெந்தயத்தையும் சேர்த்து, இட்லி பதத்திற்கு மென்மையாக அரைக்கவும்.
*உப்பு சேர்த்து 6 மணிநேரம் வரை புளிக்க வைக்கவும். இந்த மாவை இட்லி தட்டுகளில் ஊற்றி எடுத்தால், சுட சுட சத்தான தினை இட்லி ரெடி. Share it.