News December 2, 2024

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹5000 வழங்கப்படுமா?

image

கனமழை மற்றும் வெள்ளத்தால் விழுப்புரம், தி.மலை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில், புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ₹5000 வழங்குவதுபோல், தமிழ்நாட்டிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹5000 வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News August 22, 2025

TechTalk: WiFi Speed குறையுதா? நீங்களே சரி செய்யலாம்

image

வீட்ல இருக்க சில பொருட்கள், உதாரணத்துக்கு கண்ணாடி, இரும்பு மரச்சாமான், நீர் நிரப்பிய பெரிய குடுவைகள், ப்ளூடூத் சாதனங்கள், இதெல்லாம் WiFi சிக்னலை தடுக்குமாம். இதனால் இன்டர்நெட் வேகம் குறையலாம்னு Experts சொல்றாங்க. இதுக்கு எளிய தீர்வு என்னன்னா, WiFi Router-ஐ வீட்டின் நடுப்பகுதியில், உயரமாக, திறந்த இடத்தில் வைத்து பார்க்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

News August 22, 2025

சிறுபான்மையினருக்கு நெருக்கடி: CM ஸ்டாலின்

image

சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக CM ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், மத்திய அரசு வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், மத நல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கும் கூட்டம் நெடுநாள் இருக்காது என்றும் அவர் எச்சரித்தார்.

News August 22, 2025

ரேஷன் கார்டுக்கு ₹5,000.. CM ஸ்டாலின் முடிவு

image

பொங்கல் பரிசுத் தொகையாக <<17478371>>ரேஷன் கார்டுக்கு ₹5,000<<>> வழங்க CM ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இத்துடன் வழக்கம்போல் வழங்கப்படும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், முழு கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்டவற்றையும் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி இதற்கான அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட இருப்பதாகவும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. SHARE IT

error: Content is protected !!