News December 2, 2024
இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், வக்ஃப் வாரிய மசோதா குறித்து விவாதிக்கக் கோரி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அத்துடன், தமிழக வெள்ள பாதிப்பு குறித்து அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்கக் கோரி திமுக எம்.பிக்கள் முழக்கம் எழுப்பினர். தொடர் அமளியில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்ய சபாநாயகர் முயன்றும் தோல்வியடைந்ததால், இன்று நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
Similar News
News August 25, 2025
ஆண்களுக்கு உதவும் சட்டங்கள்.. நோட் பண்ணிக்கோங்க!

குடும்ப தகராறுகளில் பாதிக்கப்படும் ஆண்களுக்காக உதவும் BNS சட்டங்கள்:
◆115(2): ஒரு பெண், ஆணுக்கு உடல் ரீதியாக துன்புறுத்தலை கொடுத்து கொடுமைப்படுத்தியது நிரூபணமானால், ஒரு வருட சிறையும், ₹10,000 அபராதமும் விதிக்கப்படும்.
◆206: ஆணுக்கு எதிராக குடும்ப தகராறில், பெண் பொய் சாட்சி அளித்தது நிரூபிக்கப்பட்டால், அந்த பெண்ணுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
News August 25, 2025
10 மாசமா EMI கட்டவில்லை.. ரவி மோகன் பங்களா ஜப்தி?

சென்னை ECR-ல் உள்ள நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பங்களாவுக்காக பெற்ற கடன் தொகையின் EMI-யை 10 மாதங்களாக அவர் கட்டாததன் காரணமாக, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரியர் பாய் கொண்டு சென்ற நோட்டீஸை வாங்காமல், வங்கியில் வந்து நோட்டீஸ் பெற்றுக் கொள்வதாக கூறி ரவி மோகன் தரப்பு மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
News August 25, 2025
ரேஷன் கார்டு.. தமிழக அரசு குட் நியூஸ்!

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம். எப்படி தெரியுமா? www.tnpds.gov.in இணையதளத்தில் ‘புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில், கேட்கப்படும் விவரங்களை நிரப்பிவிட்டு, தேவையான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். 30 – 45 நாள்களில் விண்ணப்பத்தின் நிலை குறித்து அரசு தகவல் தெரிவிக்கும். SHARE IT.