News March 22, 2024
தேர்தல்: திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் யார்?

திருவள்ளூர் (தனி) எம்பி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எம்பி தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 10 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் சார்பில் இன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
Similar News
News February 20, 2026
திருவள்ளூரில் பரிதாப பலி!

கவரைப்பேட்டை அடுத்த பெரியபுலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்(25). இவர், நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(28) என்பவரும் சென்றார். இந்நிலையில். கெட்ணமல்லி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கீழே விழுந்த அஜித், படுகாயமடைந்து உயிரிழந்தார். மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News February 20, 2026
திருவள்ளூரில் பரிதாப பலி!

கவரைப்பேட்டை அடுத்த பெரியபுலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்(25). இவர், நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(28) என்பவரும் சென்றார். இந்நிலையில். கெட்ணமல்லி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கீழே விழுந்த அஜித், படுகாயமடைந்து உயிரிழந்தார். மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News February 20, 2026
புழல் சிறையில் பரபரப்பு!

திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறையில் போக்சோ வழக்கில் தண்டனை கைதியாக உள்ள ரங்கநாதன் (78) என்பவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், சிறையில் பரபரப்பு நிலவியது.


