News December 2, 2024

நாளையே கடைசி: ரயில்வேயில் 5,647 அப்ரன்டிஸ் பணியிடம்

image

வடகிழக்கு எல்லை ரயில்வேயில் காலியாக உள்ள 5,647 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் (டிச.3) நிறைவடைகிறது. Trade Apprentice பணியில் சேர விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள். வயது வரம்பு: 15-24. கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு, ITI (50% மதிப்பெண்கள்). பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும். கூடுதல் தகவலுக்கு <>இந்த<<>> லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

Similar News

News August 22, 2025

ரேஷன் கார்டில் இனி பொருள்கள் வாங்க முடியாதா?

image

ஏழைகளுக்கு மானிய விலை உணவு தானியத்துடன், 5 கிலோ இலவச தானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வசதியான பலரும் இச்சலுகை பெறும் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். இதனை கண்டறிந்து நீக்கும் வகையில், வருமானவரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட வசதியானோரின் பெயர்களை கண்டறிந்து நீக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பலரின் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

News August 22, 2025

முதுகுவலியை தவிர்க்க… இதை ட்ரை பண்ணுங்க

image

அனைத்து வயதினரும் சந்திக்கும் பிரச்னையாக முதுகுவலி உள்ளது. நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, தசை இறுக்கம், நீண்ட தொலைவு பயணம், கனமான பையை சுமப்பது போன்றவை இதற்கு காரணமாகலாம். இதை தவிர்க்க, *30 mins-க்கு ஒருமுறை, உட்கார்ந்த இடத்திலிருந்தே திரும்புதல், நேராக உட்காருதல், அடிக்கடி எழுந்து உட்காருவது, நடை போன்ற பயிற்சிகளை செய்யலாம். *பாயில் படுத்து உறங்குவது பெரும்பாலான முதுகுவலிகளை குணப்படுத்திவிடும்.

News August 22, 2025

சுபான்ஷு சுக்லாவுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

image

சர்வதேச விண்வெளி மையம் சென்று ஆராய்ச்சி பணிகள் மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இதுகுறித்து X பக்கத்தில் பதிவிட்ட ராஜ்நாத் சிங், ககன்யான் திட்டம், சுக்லாவின் விண்வெளி பயணம், விண்வெளியில் அவர் மேற்கொண்ட முக்கிய சோதனைகள் குறித்து விவாதித்தாகவும், அவரது சாதனைகளால் தேசம் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!