News March 22, 2024
கட்சிக் கொடிகளை அகற்றிய தேர்தல் அதிகாரிகள்

சென்னை கொருக்குப்பேட்டை மணலி சாலையில் 18வது மக்களவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது கட்சிக் கொடியுடன் வந்த வாகனத்தை நிறுத்தி கொடியை அகற்ற அறிவுறுத்தினர். மேலும் அனைத்து வாகனங்களையும் கண்காணிப்புடன் சோதனை செய்து வருகின்றனர்.
Similar News
News September 8, 2025
JUST IN: சென்னையில் வலுக்கட்டாயமாக கைது

தூய்மை பணியாளர்களின் ஒப்பந்தத்தை தனியார் மையம் படுத்தக்கூடாது என கடந்த ஒரு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொது இடத்தில் போராட்டத்தை நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், கொருக்குபேட்டை, அயனாவரம் பகுதியில் தூய்மை பணியாளர்களின் வீடுகளிலே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
News September 8, 2025
BREAKING: சென்னையில் ஓயாத போராட்டம்

சென்னை மண்டலம் 5,6 தூய்மை பணிகளை தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. தூய்மைப்பணியாளர்கள் பொதுவெளியில் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி வழங்காத நிலையில், கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் 13 தூய்மைப்பணியாளர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
News September 8, 2025
கிண்டியில் 3 நாள் பயிற்சி! மிஸ் பண்ணிடாதீங்க

கிண்டியில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் மூலிகை அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்பு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி செப்.17 முதல் 19 வரை 3 நாள்கள் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18-வயது நிரம்பிய அனைவரும் சேரலாம். மேலும் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்திலும், 86681-02600 என்ற எண்ணை அழைக்கலாம். (SHARE)