News December 1, 2024

BREAKING: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் நலனை கவனத்தில் கொண்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

Similar News

News April 27, 2025

போலி சான்றிதழ் வழக்கு…உ.பி. Dy. CM-க்கு செக்

image

உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு எதிரான போலி சான்றிதழ் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிட, போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்தார் என பாஜகவை சேர்ந்த திவாகர் நாத் திரிபாதி என்பவர் 2021-ல் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு பல்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ள நிலையில், மவுரியாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை மே 6-ல் அலகாபாத் ஐகோர்ட்டில் நடைபெறவுள்ளது.

News April 27, 2025

பணமோசடி வழக்கு…மகேஷ் பாபு ஆப்செண்ட்

image

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் ED சம்மன் அளித்திருந்த நிலையில், நடிகர் மகேஷ் பாபு ஆஜராகவில்லை. பணமோசடி தொடர்பாக, சாய் சூர்யா, சுரானா நிறுவனங்களில் ED சோதனை மேற்கொண்டது. அப்போது, மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்குக்கு அவற்றில் இருந்து ₹11.4 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில், வேறொரு நாளில் விசாரணைக்கு ஆஜராக அனுமதி கோரி மகேஷ் பாபு ED-க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

News April 27, 2025

பஹல்காம் தாக்குதல்; பாஜக ஆதாயம்…TMC எம்பி அட்டாக்

image

பாக். மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் வந்துவிட்டது என பதிவிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, ஊடகங்களில் அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த விவாதங்களுக்கு பதிலாக, பாஜக ஆதாயம் அடையும்படியான செய்திகள் வெளியாகின்றன சாடியுள்ளார்.

error: Content is protected !!