News March 22, 2024
கெஜ்ரிவால் மனு விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீதான விசாரணை, 3 நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. மனு மீது விசாரணை நடத்த நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமை நீதிபதி சந்திரசூட் நியமித்தார். அதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 3 நீதிபதிகள் அமர்வு மனுவை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
Similar News
News January 12, 2026
கமலின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை HC உத்தரவிட்டுள்ளது. ‘நீயே விடை’ என்ற நிறுவனம் அனுமதியின்றி தனது புகைப்படம், பெயர், பிரபல வசனத்தை பயன்படுத்தி, டி-சர்ட்கள், சர்ட்களை விற்பனை செய்வதை சுட்டிக்காட்டி அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த உரிமையியல் வழக்கை விசாரித்த சென்னை HC, தடை உத்தரவை பிறப்பித்து, வழக்கை பிப்ரவரி மாதம் ஒத்திவைத்தது.
News January 12, 2026
அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. எதிர்பாராத அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் இணைய மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக EPS கூறியுள்ளார். அதிமுக வேட்பாளர் நேர்காணலின்போது பேசிய அவர், இன்னும் ஓரிரு நாள்களில் புதிய கட்சி அதிமுக கூட்டணிக்கு வரவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேலும், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் பேசியுள்ளார். முன்னதாக, அதிமுக கூட்டணியில் அமமுக, தேமுதிக இணையலாம் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
News January 12, 2026
ஒவ்வொரு மாதமும் ₹6000 கொடுக்கும் அரசு திட்டம்

தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌஷல்யா யோஜனா திட்டம் மூலம் கிராமப்புற பகுதிகளில் வேலையில்லாத இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சேருபவர்களுக்கு 2 முதல் 6 மாதங்களுக்கு, மாதம் ₹6000 ஊக்கத்தொகையும் கிடைக்கும். இதற்கு 15 முதல் 35 வயதுடைய இளைஞர்களும், 45 வயதுக்குள் இருக்கும் பெண்களும் விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <


