News November 30, 2024
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று(நவ.30) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
தென்காசி: மதுபோதையால் தீ விபத்து.. தொழிலாளி பலி

திருவேங்கடம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித் தொழிலாளியான இவர் சில தினங்களுக்கு முன் மது போதையில் வீட்டில் கேஸ் அடுப்பு பற்ற வைக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக அவரது வேட்டியில் தீ பிடித்து உடல் முழுவதும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த பாலமுருகன் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதமாக உயிரிழந்தார்.
News December 13, 2025
தென்காசி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

தென்காசி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04633-299544) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க
News December 13, 2025
தென்காசி: டூவீலர் விபத்தில் பரிதாப பலி

புளியங்குடி வீரப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த மைதீன் (36) என்பவர் நேற்று இரவு புளியங்குடி – சிந்தாமணியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தனது டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்து கொண்டிருந்த வேன் டூவீலரில் மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.


