News November 30, 2024
டாஸ்மாக்கில் குவியும் மதுபிரியர்கள்

சென்னையில் பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையில், மழை பெய்தாலும் பரவாயில்லை , வெள்ளநீர் சூழ்ந்தாலும் கவலையில்லை என மதுபிரியர்கள், டாஸ்மாக் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்துகின்றனர்.
Similar News
News April 28, 2025
மூன்று நாள்கள் போர் நிறுத்தம்

உக்ரைன் மீதான போர் 3 நாள்கள் நிறுத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். மே 8 முதல் மே 10 வரை போர்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. மே 9-ம் தேதி இரண்டாம் உலகப்போரின் வெற்றி தின கொண்டாட்டம் நடைபெறவிருப்பதால், புடின் இந்த முடிவை எடுத்திருக்கிறார். மேலும், இந்த போர்நிறுத்தம் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News April 28, 2025
பொள்ளாச்சி வழக்கில் விரைவில் தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பளிக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம். 2019-ம் ஆண்டு 19 வயது இளம்பெண் ஒருவர் அளித்த புகாரில் தொடங்கிய விசாரணை, பூதாகரமாகி நாட்டையே உலுக்கியது. 9 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியது, பின்னர் CBI விசாரணையில் அம்பலமானது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்திருக்கும் நிலையில் மே 13-ம் தேதி தீர்ப்பு வருகிறது.
News April 28, 2025
காவலர்களுக்கு வார விடுமுறை.. உறுதி செய்த ஐகோர்ட்

காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை, வாரம் ஒருநாள் கட்டாயம் விடுமுறை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வார விடுமுறை வழங்குவது தொடர்பான அரசாணையை முறையாக நடைமுறை படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்ட ஐகோர்ட், விடுமுறை வழங்க தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.