News November 30, 2024

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: உதயநிதி

image

புயல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என துணை முதல்வர் உதயநிதி கேட்டுக்கொண்டுள்ளார். பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், அரசு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளதால் புயலால் ஏற்படும் பாதிப்புகள் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது என்றார். தாழ்வானப் பகுதிகளில் தேங்கும் மழை நீர் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டு வருவதால், விரைவில் இயல்பு நிலை திரும்பும் எனவும் தெரிவித்தார்.

Similar News

News April 28, 2025

பொள்ளாச்சி வழக்கில் விரைவில் தீர்ப்பு

image

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பளிக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம். 2019-ம் ஆண்டு 19 வயது இளம்பெண் ஒருவர் அளித்த புகாரில் தொடங்கிய விசாரணை, பூதாகரமாகி நாட்டையே உலுக்கியது. 9 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியது, பின்னர் CBI விசாரணையில் அம்பலமானது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்திருக்கும் நிலையில் மே 13-ம் தேதி தீர்ப்பு வருகிறது.

News April 28, 2025

காவலர்களுக்கு வார விடுமுறை.. உறுதி செய்த ஐகோர்ட்

image

காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை, வாரம் ஒருநாள் கட்டாயம் விடுமுறை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வார விடுமுறை வழங்குவது தொடர்பான அரசாணையை முறையாக நடைமுறை படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்ட ஐகோர்ட், விடுமுறை வழங்க தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

News April 28, 2025

இப்படி தர்பூசணியை சாப்பிட்டால் பிரச்னைதான்!

image

சம்மர் சீசனில் பலரும் விரும்பும் பழமாக இருக்கிறது தர்பூசணி. ஆனால், அதைச் சாப்பிடும்போது நிச்சயம் கவனம் வேண்டும். இல்லையேல், அது ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிட்டால் வாயு ஏற்படலாம். அதே போல, அதிக அளவில் தர்பூசணியை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும். மேலும், பித்தம், வயிற்று பிரச்னை போன்றவை உண்டாக வாய்ப்பிருக்கிறதாம்.

error: Content is protected !!