News November 30, 2024
கணக்கில் வராத கோடிக்கணக்கான தங்கம் பறிமுதல்

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தலைமையிலான 8 பேர் கொண்ட பாதுகாப்பு படையினர் ஜூலை மாதம் திருச்சி ரயில்வே ஜங்சனில் சோதனை செய்ததில் ஒரு ரயில் பயணியிடம் கணக்கில் வராத சுமார் 2,796.04 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 89 லட்சத்து ஆயிரத்து 230 ஆகும். தங்கத்தை பறிமுதல் செய்த 8 பேர் கொண்ட ரயில்வே பாதுகாப்புபடையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Similar News
News December 9, 2025
திருச்சி: ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் நாளை (டிச.10) திருச்சி வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையினர், மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் உடைமைகள், பார்க்கிங் மற்றும் பார்சல் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 9, 2025
திருச்சி அருகே 50 சவரன் நகை கொள்ளை

செங்காட்டுபட்டி அடுத்த கீரம்பூர் பகுதியில் வசிக்கும் சகோதரர்களான சசிகுமார், சிவகுமார் ஆகியோரது வீடுகளில் பூட்டை உடைத்து ஆளில்லாத நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள், 50 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News December 9, 2025
திருச்சி மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

திருச்சி மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <


