News November 30, 2024
வரும் சட்டமன்றத்தில் தென்காசியில் போட்டி – ஜான்பாண்டியன்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தேவேந்திரகுல சமுதாயம் சார்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நேற்று(நவ.29) நடைபெற்றது. விழாவிற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டு திறந்துவைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம் என்றார்.
Similar News
News October 2, 2025
தென்காசி: டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, B.E படித்தவர்கள் இப்பணிக்கு அக். 16க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கு <
News October 2, 2025
தென்காசி: கடைகள் ஏலம் அறிவிப்பு

தென்காசி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தையில் உள்ள 77 கடைகளை குத்தகை உரிமம் அனுபவித்துக் கொள்ள ஆணையாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் ஏலம் விடப்பட உள்ளது. அக்டோபர் 24, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் ஏலம் நடைபெறும் நாளில் காலை 11 மணி வரை ஒப்பந்தப்புள்ளிகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும், 11.30 மணிக்கு ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 2, 2025
தென்காசி: ரயில் சேவையில் மாற்றம்

அக்டோபர் மாதம் மாற்றுப்பாதையில் இராஜபாளையம் வழி செங்கோட்டை – மயிலாடுதுறை (16848/16847) விரைவுவண்டி இயக்கம். இரயில் தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் காரணமாக செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவுவண்டி (16848) வழி: இராஜபாளையம் வரும் 03,04, 05,06, 07,09, 10,11,12, 13, 14,16,17,18,22,23,24,25,26,27,28,30,31ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தகவல்.