News November 30, 2024
திருமணம் ஆகாமல் குழந்தை எப்படி? கஸ்தூரி வருத்தம்

திருமணமே ஆகாமல் குழந்தை பிறந்தது எப்படி என போலீசார் தன்னிடம் விசாரித்ததாக செய்தி பரவியதை நடிகை கஸ்தூரி வருத்தத்துடன் கண்டித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் குழந்தையை விட்டு சென்றது குறித்து சிலர் கேட்பதாகவும், அப்போது அத்தை, மாமா குழந்தையைப் பார்த்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சிறையில் செல்போன் இல்லாமல் இருந்ததுதான் பெரிய தண்டனையாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
இன்ஸ்டா சிறுவனுக்கு Thug கொடுத்த மாடல் அவந்திகா!

அவந்திகா மோகனின் இந்த ரிப்ளையை பார்த்த 90s-கிட்ஸ்கள், ‘தம்பி போய் படிக்கிற வேலைய பாருப்பா’ என கலாய்த்து வருகின்றனர். மாடலிங் கேர்ளான அவந்திகாவுக்கு 17 வயது சிறுவன் ஒருவன், உங்களை திருமணம் செய்ய விரும்புவதாக இன்ஸ்டாவில் கேட்டுள்ளான். அதற்கு, ‘இப்போது நீ பரீட்சைகளை பற்றித்தான் கவலைப்பட வேண்டும், திருமணத்தை பற்றி அல்ல’ என அறிவுரை வழங்கியுள்ளார் அவந்திகா. நீங்க என்ன நினைக்கிறீங்க?
News September 9, 2025
சினிமாவின் உச்ச நட்சத்திரம் உதயநிதி: மா.சுப்பிரமணியன்

சைதாப்பேட்டையில் நடந்த விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், DCM உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை பற்றி பேசியது வைரலாகி வருகிறது. அதாவது, ‘திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாக உள்ள நீங்கள் (உதயநிதி), விழா மேடையில் இருந்து இறங்கும்போது முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று சொன்னால் நன்றாக இருக்கும்’ என 2018-ல் தான் கூறியதாகவும், அவர் அதை ஏற்றதாகவும் தெரிவித்துள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News September 9, 2025
செங்கோட்டையன் வாழ்வில் செய்த முக்கிய தவறு!

அதிமுகவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தலைவராக இருந்தும் செங்கோட்டையன் பக்கம் நிற்க இரண்டாம் கட்ட தலைவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு அவரது கடந்த கால செயல்பாடுகளே காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, தலைமையிடம் விசுவாசமாக இருந்தாலும், நிர்வாகிகளிடம் அதனை அவர் காட்டவில்லையாம். அதோடு, 2017-ல் CM நாற்காலி அவரை தேடி வந்ததை தவற விட்டது பெரும் தவறு என்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?