News November 30, 2024

குமரி அணைகளுக்கு வரும் நீரின் வரத்து விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 310 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 188 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 501 கன அடி மற்றும் பெருஞ்சாணி அணையில் இருந்து 510 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 295 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 169 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Similar News

News November 13, 2025

குமரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு விருது

image

தமிழக தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் 2004 – 2021 ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளாக குமரி மாவட்டத்தில் ஆலங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி, ஈத்தாமொழி அரசு தொடக்கப்பள்ளி, கடியப்பட்டணம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. நாளை (நவ.14) காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேடயம் வழங்குகிறார்.

News November 13, 2025

கன்னியாகுமரியில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில்

image

கோவில் நகரமான கன்னியாகுமரியில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில் இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. இது வருகிற டிச-7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து வாரணாசி புறப்பட்டு செல்கிறது. 13ம் தேதி வாரணாசியில் இருந்து கன்னியாகுமரிக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இதனை ரயில்வே நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.

News November 13, 2025

குமரி மாவட்ட கோர்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளதா?

image

சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பு:- தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுரைப்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் மாவட்ட, வட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் டிச.13ம் தேதி அன்று மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை முடிக்க விருப்பமுள்ளோர் நவ.24 ம் தேதிக்குள் நாகர்கோவில் சட்டப் பணிகள் குழுவில் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!