News November 30, 2024
நாளை முதல் OTP வருவதில் பிரச்னை ஏற்படுமா?

வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள் என ஒரு மெசேஜ் எங்கிருந்து, யாரால் அனுப்பப்படுகிறது என்பதை டிராக் செய்யும் வசதியை ஜியோ உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் அமல்படுத்த இன்றே கடைசி நாளாகும். இதை மீறும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு OTP பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இருப்பினும் Spam மோசடிகளை தடுக்க மேற்கொள்ளும் இந்நடவடிக்கையால், நாளை முதல் OTP பெறுவதில் சிக்கல் ஏற்படாது என TRAI உறுதிபடுத்தியுள்ளது.
Similar News
News April 28, 2025
18 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைத்த RCB!

டெல்லியில் நடைபெற்ற DC அணிக்கு எதிரான மேட்ச்சில், RCB வெற்றி பெற்று மாபெரும் வரலாற்று ஒன்றை படைத்துள்ளது. IPL-ல் வெளி கிரவுண்டில் தொடர்ச்சியாக 6 மேட்ச்களை வென்ற ஒரே அணி RCB தான். கொல்கத்தா, சென்னை, மும்பை, ஜெய்ப்பூர், சண்டிகர், டெல்லி மைதானங்களில் வரிசையாக RCB வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சீசனில் நேற்றைய வெற்றியுடன் RCB, 10 மேட்சில் 7 வெற்றியை பெற்று, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
News April 28, 2025
8வது தேர்ச்சி போதும்.. தமிழக அரசில் 392 வேலைவாய்ப்புகள்!

சென்னை ஹைகோர்ட்டில் அலுவலக உதவியாளர், சுகாதாரப் பணியாளர் உள்பட 392 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளன. குறைந்தபட்சமாக 8 ஆம் தேர்ச்சி பெற்று, 18-47 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, திறன் சோதனையின் மூலம் தேர்வு நடைபெறும். சம்பளமாக ₹15,700 – ₹58,100 வரை வழங்கப்படும். மே 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
News April 28, 2025
160 தொகுதிகளில் அதிமுக போட்டி? இபிஎஸ் திட்டம்

2026 தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி அமைத்துள்ளன. தேமுதிக உள்ளிட்ட மேலும் சில கட்சிகளும் கூட்டணியில் சேரலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க, 160 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டுமென இபிஎஸ் முடிவு செய்திருப்பதாகவும், எஞ்சிய 74 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அளிக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை கூட்டணி ஏற்குமா?