News November 30, 2024
தூத்துக்குடி: கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம்

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து சதீஷ்குமார் என்பவர் படகில், மீனவர்கள் 6 பேர் கடந்த 21ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க சென்ற நிலையில், தற்போது வரை அவர்கள் கரை திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களின் நிலை குறித்து கண்டுபிடிக்க மாவட்ட நிர்வாகத்திடம் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Similar News
News December 8, 2025
தூத்துக்குடி: சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.!

கோவையிலிருந்து திருச்செந்தூருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சுற்றுலா வேனில் 22 பேர் பயணம் மேற்கொண்டனர். வேன் மதுரை – தூத்துக்குடி சாலையில் எட்டயபுரம் ராசப்பட்டி விலக்கு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
News December 7, 2025
தூத்துக்குடி: ரூ.96,765 ஊதியத்தில் வேலை

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பிரிவில் உள்ள 300 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ஊதியமாக ரூ.96,765 வரை வழங்கப்படும் நிலையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க டிச.15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <
News December 7, 2025
தூத்துக்குடி: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!


