News November 29, 2024
கள்ளக்குறிச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை நவம்பர் 30-ம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து விதமான பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
மாவட்ட அளவிலான வன உரிமை குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கல்வராயன் மலை பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு தனிநபர் வன உரிமைச் சான்று வழங்குவது தொடர்பான மாவட்ட அளவிலான வன உரிமை குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று (டிச.8) நடைபெற்றது. இதில் வனத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
News December 8, 2025
கள்ளக்குறிச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக வீரசோழபுரம் என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் வரும் டிசம்பர் 27.ம் தேதி அன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
கள்ளக்குறிச்சி: போலீஸ் SI-க்கே கொலை மிரட்டல்..!

கள்ளக்குறிச்சி: திருப்பாலபந்தல் காவல் நிலைய எஸ்.ஐ வேல்முருகன், நேற்று (டிச.8) அருதங்குடி புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மாரிமுத்து என்பவர், எஸ்.ஐ-யை பார்த்து ‘என் வண்டியை ஏன் மறிக்கிறீர்கள்?’ எனக் கேட்டு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த வழக்கில் இன்று (டிச.8) மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.


