News March 22, 2024

ஈரோடு : ரூ.96.34 லட்சம் பறிமுதல்

image

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.96 லட்சத்து 34 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு ரூ.22 லட்சத்து 66 ஆயிரம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 14, 2025

ஈரோடு அருகே அரசு பள்ளியில் எம்.பி ஆய்வு

image

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சிவகிரி – அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாடாளுமன்ற தொகுதி நிதியின் மூலம் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நிலத்தடி நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு எம்பி., கே.இ.பிரகாஷ் பங்கேற்று பணிகளை துவங்கி வைத்தார். பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை உண்டு பார்த்து ஆய்வு செய்தார்.

News August 14, 2025

ஈரோடு: உங்கள் கிராம வரவு செலவு கணக்கை பாருங்க!

image

ஈரோடு மக்களே தமிழகம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகின்றது. இந்நிலையில் கிராம சபைக் கூட்டத்தில் உங்கள் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்படும், எனவே ஊராட்சி வரவு செலவு கணக்கில் பிழை (அ) மாற்றம் இருப்பதை கண்டறிய இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து உங்கள் ஊராட்சியின் நிர்வாக வெளிப்படை தன்மையை காணலாம்! அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 14, 2025

ஈரோடு : பவானி – சித்தோடு சாலை சீரமைப்பு

image

பவானி-சித்தோடு நெடுஞ்சாலையில் பஸ்கள்,கனரக லாரிகள்,நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் சாலை குண்டும் குழியுமாக இருப்பதோடு, ஜல்லிகள் பரவலாக கிடந்தது. பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், நேற்று முன்தினம் குண்டும் குழியுமான இடங்களில், கான்கிரீட் போட்டு சாலையை அதிகாரிகள் சீரமைத்தனர்.

error: Content is protected !!