News November 29, 2024
கர்மா சும்மாவே விடாது: வெச்சு செய்த நயன்தாரா

தனது திருமண ஆல்பத்தில், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இடம்பெற்ற 24 நொடி சீனை, தனுஷின் அனுமதியில்லாமல் நயன்தாரா பயன்படுத்தினார். இதையடுத்து, அவரிடம் ₹ 10 கோடி கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில், பொய்களால் ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் அழித்தால், அதை கடனாக எடுத்துக் கொண்டு, கர்மா உங்களுக்கு வட்டியுடன் திருப்பித் தரும்” எனப் பதிவிட்டுள்ளார்.
Similar News
News April 27, 2025
வீட்டில் சாமி கும்பிடும் போது இந்த 3 விஷயங்கள் முக்கியம்

வீட்டில் கடவுளை தூய மனதுடன் வழிபட முடியவில்லை, பூஜை செய்ய முடியவில்லை என்றால் அதற்கு கர்ம வினையே தான் காரணம் எனப்படுகிறது. இதிலிருந்து விடுபட இந்த 3 விஷயங்களை பின்பற்ற வேண்டும். இதை ‘ திரிகரண சுத்தி’ என்கிறார்கள். அதாவது வழிபடும் போது, மனதில் நல்ல எண்ணங்களை நிலைநிறுத்தி, கைகளால் பூக்களை தூவி, வாய் முழுக்க கடவுளின் மந்திரங்களை உச்சரித்து கடவுளை பூஜிக்க வேண்டும். SHARE IT.
News April 27, 2025
நடிகை செளந்தர்யா மரணம்… கிடைக்காத சடலம்

பொன்னுமணி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பிறகு, ரஜினியின் அருணாச்சலம், படையப்பா, விஜயகாந்தின் தவசி, சொக்கத்தங்கம் என பல வெற்றி படங்களில் நடித்தவர் செளந்தர்யா. பெங்களூரு அருகே கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி விமான விபத்தில் பலியானார். அப்போது அவரின் வயது 32 மட்டுமே. ஆனால் 21 ஆண்டுகளாகியும், அவர், அவருடன் பயணித்தோரின் சடலங்கள் கிடைக்கவில்லை. மர்மம் நீடிக்கிறது.
News April 27, 2025
5 ஆண்டுகளுக்கு பின் தொடங்கும் புனித யாத்திரை

கைலாஷ் – மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பின் தொடங்க உள்ளது. வரும் ஜூன் – ஆகஸ்ட் வரை 750 பேரை, 15 பிரிவுகளாக அழைத்து செல்ல வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. கடைசியாக கடந்த 2019-ல் இந்த யாத்திரை நடந்தது. கொரோனா மற்றும் 2020-ல் லடாக் எல்லையில் சீன மோதலால் யாத்திரை நிறுத்தப்பட்டது. மானசரோவர் ஏரி சீனாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட திபெத்தில் உள்ளது.