News March 22, 2024
கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

கரூர், கடவூர் சீலமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பெரியசாமி. இவர் கடவூரில் அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பெரியசாமி நீரில் மூழ்கியுள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News August 15, 2025
கரூரில் இன்று கிராம சபைக் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று(ஆக.15) காலை 11.00 மணியளவில் பாகநத்தம் ஊராட்சி, வெடிக்காரன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் சிறப்பு பார்வையாளராக கலந்து கொள்கிறார். மேலும் 157 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
News August 15, 2025
கரூரில் சொந்த வீடு வேண்டுமா? இத பண்ணுங்க!

கரூரில் சொந்த வீடு கட்ட முனைபவரா நீங்கள்? பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் தாமாக வீடு கட்ட அரசு சார்பாக ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் ரூ.75,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இது 8.50 சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரை வட்டி விகீதத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள<
News August 14, 2025
கரூர்: தெருநாய்கள் தொல்லையா? உடனே CALL

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் தெருநாய்கள் கடித்ததால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் புகார் அளிக்க 04324-260341 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் . இதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.