News November 29, 2024

ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை 

image

திருப்புவனம் ஒன்றியத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 40 ஆண்டுகளுக்கு முன்பு 40 க்கும் மேற்பட்ட சமுதாய கிணறுகள் தோண்டப்பட்டன. இதில் ஒரு கிணறு மூலம் 20 முதல் 30 ஏக்கர் பாசன வசதி பெற்றனர். காலப்போக்கில் விவசாயிகள் குழுக்கள் அமைக்காமல் விட்டதால் இருபதுக்கும் மேற்பட்ட கிணறுகளை சிலர் ஆக்கிரமித்தனர். அவற்றை மீட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News August 9, 2025

சிவகங்கை: மன அமைதி பெற இங்க போங்க.!

image

சிவகங்கை நகரசூரக்குடியில் அமைந்துள்ளது தேசிகநாதர் கோயில். இங்குள்ள பைரவர் சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு. ஒரு யாகத்தில் சூரியன் பங்கேற்று, சிவனை அழைக்காததால் ஆத்திரமடைந்த சிவன், சூரியனை தண்டித்தார்.பின்னர் சிவன் கருணை கொண்டு சாப விமோசனம் தந்தார்.இதனடிப்படையில் அங்கு கோயில் எழுப்பப்பட்டது. குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, மன அமைதி பெற இங்கு வழிபட்டால் நடக்கும் என்பது ஐதீகம்.

News August 9, 2025

ஆங்கிலேயர் கால கல்வெட்டு கண்டடுப்பு

image

ஆங்கிலேய ஆட்சியின் போது இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தையும், புதுக்கோட்டை அரசையும் பிரிக்கும் எல்லைக்கல் ஒன்று சிவகங்கை நெற்குப்பைக்கும் புதுக்கோட்டை வேந்தன்பட்டிக்கும் நடுவே உள்ள பள்ளத்துப்பட்டி விலக்கு அருகே புதர் மண்டிய இடத்தில் காணப்பட்டது. காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் ராஜேந்திரன் ஆய்வு செய்தனர்.

News August 9, 2025

சிவகங்கை: கேஸ் BILL பிரச்சனையா இதை பண்ணுங்க..!

image

சிவகங்கை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.யாருக்காவது கண்டிப்பாக உதவும்.

error: Content is protected !!