News November 29, 2024
1 நாள் கூட நீடிக்காத போர் நிறுத்தம்..!

போர் நிறுத்தத்தை அறிவித்த மறுநாளே தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் நடமாட்டத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா மீறியதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. லெபனானில் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், போர்நிறுத்த அறிவிப்பு மக்கள் மனதில் நிம்மதியை வரச் செய்தது. ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை.
Similar News
News April 26, 2025
BREAKING: போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்

போப் பிரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவால் போப் 21-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து தேவாலயத்தில் அவரின் உடல் 3 நாள்கள் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். பின்னர் இன்று வாடிகனுக்கு வெளியே உள்ள Santa Maria Maggiore basilica தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் கத்தோலிக்க மதத் தலைவர்கள், உலகத் தலைவர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
News April 26, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தஞ்சை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று IMD தெரிவித்துள்ளது. இதன்படி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
News April 26, 2025
அமைச்சரின் தொகுதியிலேயே கலப்படம் – பாஜக குற்றச்சாட்டு

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியின் திண்டுக்கல் மாவட்டத்திலேயே பருப்பில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஆட்சியர் நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். தரமான பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியுள்ளது.