News November 29, 2024
1 நாள் கூட நீடிக்காத போர் நிறுத்தம்..!

போர் நிறுத்தத்தை அறிவித்த மறுநாளே தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் நடமாட்டத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா மீறியதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. லெபனானில் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், போர்நிறுத்த அறிவிப்பு மக்கள் மனதில் நிம்மதியை வரச் செய்தது. ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை.
Similar News
News December 17, 2025
IPL ஏலம்: விலை போகாத தமிழக வீரர்கள்

IPL மினி ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏலப்பட்டியலில் ராஜ்குமார், துஷார் ரஹேஜா, சோனு யாதவ், இசக்கி முத்து, அம்ப்ரிஷ் உள்ளிட்ட 11 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் ஒருவரை கூட எந்த அணியும் வாங்குவதற்கு முனைப்பு காட்டவில்லை. அஸ்வின் குறிப்பிட்டிருந்த சன்னி சந்துவின் பெயர் கூட ஏலத்தில் வாசிக்கப்படவில்லை. TN வீரர்களின் ஃபார்ம், திறனில் பிரச்னையா? என்ன காரணம்
News December 17, 2025
பாதுகாப்பற்ற அரசுப்பள்ளி கட்டடங்கள்: சீமான்

<<18583116>>திருவள்ளூரில் <<>>சுவர் இடிந்து விழுந்து மாணவன் இறந்தது, வேதனையளிப்பதாக சீமான் கூறியுள்ளார். கடந்தகால துயர்களை படிப்பினையாக கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் பள்ளிகளின் தரம் மேம்பட்டிருக்கும், ஆனால் அதை செய்யாமல் DMK அரசு அலட்சியம் காட்டியதாக அவர் சாடியுள்ளார். கார் பந்தயம், கலைஞர் அரங்கம் என பல நூறு கோடிகளை வீண்விரயம் செய்யும் அரசிடம் பள்ளிகளை தரமானதாக மாற்ற நிதி இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 17, 2025
பொங்கல் பரிசு.. வெளியானது முக்கிய தகவல்

பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டை போலவே ஜன.3 முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை வழங்குவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின், ஜன.9-ம் தேதி முதல் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


