News November 29, 2024

5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

image

வங்கக் கடலில் இன்னும் சில மணி நேரங்களில் ‘ஃபெங்கல்’ புயல் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புதுச்சேரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Similar News

News April 26, 2025

பாகிஸ்தானுடன் இனி விளையாடக்கூடாது : கங்குலி

image

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட்டை இந்தியா முற்றிலும் துண்டிக்க வேண்டும் என வலியுறுத்திய சவுரவ் கங்குலி, ஐசிசி மற்றும் ஆசிய போட்டிகளில் கூட பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் கங்குலி தெரிவித்தார். முன்னதாக, எந்தவொரு போட்டியிலும் பாகிஸ்தானுடன் இந்தியா மோதப் போவதில்லை என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

News April 26, 2025

14 தீவிரவாதிகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

image

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 14 தீவிரவாதிகள் குறித்த தகவலை புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. 20-40 வயதுடைய இவர்கள் பாகிஸ்தானின் நிதியுதவியுடன் J&K-ல் தங்கி, தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

News April 26, 2025

விஜய் கருத்தரங்கு இடத்தில் தீ விபத்து

image

கோவையில் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெறும் இடம் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து பிரதான சாலை வரை ரோட் ஷோ நடத்திய விஜய்-க்கு கட்சி நிர்வாகிகள் தாரை தப்பட்டை கிழிய வரவேற்பு கொடுத்தனர். பின்னர், அவர் கருத்தரங்கு மேடைக்கு சென்றார். அப்போது, திடீரென்று கருத்தரங்கு நடக்கும் இடம் அருகே திடீரென்று தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, உடனே அணைக்கப்பட்டது.

error: Content is protected !!