News March 22, 2024
கிருஷ்ணகிரி: தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஏணிபெண்டா பகுதியை சேர்ந்தவர் அருண் (24), மேஸ்திரி. இவருக்கு தர்ஷன் (3) என்ற குழந்தை உள்ளது. சம்பவத்தன்று காலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தர்ஷன் அங்குள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாரதவிதமாக தவறிவிழுந்தது. குழந்தையை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
Similar News
News November 8, 2025
கிருஷ்ணகிரி பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள்<
News November 8, 2025
கிருஷ்ணகிரி: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

10, +2 மதிப்பெண் சான்றிதழ், ஏதேனும், அரசு ஆவணங்கள் தொலைந்துவிட்டால், அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியதில்லை. இனி ஈசியாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். அரசின் epettagam.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று, உங்களின் ஆதார் எண்ணைக் கொடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை கொடுத்து உங்களின் ஆவணங்களை அனைத்தும் உடனே பதிவு செய்து கொள்ளலாம் . SHARE செய்யவும்.
News November 8, 2025
கிருஷ்ணகிரி: கேஸ் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க!

கிருஷ்ணகிரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.


