News November 29, 2024

கள்ளக்குறிச்சியில் 403 பேருக்கு சுய தொழில் தொடங்க கடன் உதவி

image

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் 403 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மூன்று கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் மானியத்தில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி தற்போது பயன் அடைந்து வருகிறார்கள் என கூறினார்.

Similar News

News December 7, 2025

கள்ளக்குறிச்சி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

கள்ளக்குறிச்சியில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இதுகுறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News December 7, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply!

image

கள்ளக்குறிச்சி மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

News December 7, 2025

கள்ளக்குறிச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!