News March 22, 2024

நள்ளிரவு 1 மணிவரை மெட்ரோ ரயில் சேவை

image

சென்னையில் இன்று(மார்ச் 22) இரவு 11 மணி முதல், அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெறும் ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு ரசிகர்கள் வீடு திரும்ப வசதியாக, இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, காலை முதலே வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு வருகிறது.

Similar News

News August 14, 2025

மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை சென்னை மெட்ரோ ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சேவை நடைபெறும். பீக் ஹவர்சான மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும். கூட்டம் குறைவான நேரங்களில் மெட்ரோ ரயில்கள் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

சென்னை டூ மதுரைக்கு ரூ.4,000 டிக்கெட்..! அதிர்ச்சியில் மக்கள்

image

3 நாள்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை டூ மதுரைக்கு ரூ.4,000 வரையும், சென்னை- கோவை, சென்னை- சேலம், சென்னை- திருச்சிக்கு ரூ.1,500 முதல் ரூ.3,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சொந்த ஊர் செல்லும் மக்கள் கவலை அடைந்தள்ளனர். அதிக கட்டணம் வசூலித்தால் 1800-424-6151 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.

News August 14, 2025

சென்னை: B.Sc,,B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <>இந்த லிங்கில் <<>>வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!