News March 22, 2024

தருமபுரி: தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், வட்டுவனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதி மக்கள், மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பேனர் வைத்து இன்று(மார்ச் 22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டா கோரி பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிட்டு மனு கொடுத்தும், இதுவரை தங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை என தெரிவிக்கும் இம்மக்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக கூறுகின்றனர்.

Similar News

News August 14, 2025

தர்மபுரியில் இலவசம்! மிஸ் பண்ணிடாதீங்க

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கிராமப்புறப் பெண்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி தொடங்கவுள்ளது. இந்தப் பயிற்சியில் உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க!

News August 14, 2025

தருமபுரி: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

தர்மபுரி, நாளை சுதந்திர தின விழா நடைபெறுவதை ஒட்டி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அழைப்பு விடுத்துள்ளனர். காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தும், காவல் துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றும் சிறப்பிக்க உள்ளார்கள். பொதுமக்கள் இவ்விழாவிற்கு வருக தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News August 14, 2025

மகளிருக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கிராமப்புறப் பெண்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி தொடங்கவுள்ளது. இந்தப் பயிற்சியில் உணவு மற்றும் அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.மேலும் தகவல்களுக்கு இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை அணுகலாம்.

error: Content is protected !!