News November 29, 2024
திருப்பூரில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொடூரக் கொலை!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் வலுப்பூரம்மன் கோயில் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு பல்லடம் அரசு ஹாஸ்பிட்டலுக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பணம், நகைக்காக கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
Similar News
News September 7, 2025
வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண் இயக்குநர்

82-வது வெனிஸ் திரைப்பட விருது விழாவில், இந்தியாவின் அனுபர்னா ராய் கௌரவமிக்க விருதைப் பெற்றுள்ளார். ‘Songs of Forgotten Trees’ படத்திற்காக Orizzonti பிரிவில் விருதை பெரும் முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். நவீன கலை மற்றும் டிரெண்டை உருவாக்கும் முதல் பட இயக்குநருக்கு Orizzonti பிரிவில் இந்த சர்வதேச விருது வழங்கப்படும். இரு பெண்களுக்கு இடையிலான உறவுச் சிக்கலை இப்படம் பேசுகிறது.
News September 7, 2025
பாஜக நுழைந்த மாநிலம் உருப்படாது: ப.சிதம்பரம்

தமிழகத்திற்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் போது நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வாக்குத்திருட்டை பாஜகவால் செயல்படுத்த முடியாது என்றாலும், நாம் கவனமாக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். ‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்ற பழமொழி போல, பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது என விமர்சித்துள்ளார்.
News September 7, 2025
செல்போன் ரீசார்ஜ் 1 மாதம் இலவசம்.. உடனே முந்துங்க

ஜியோவின் 9-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி <<17616667>>பல ஆஃபர்கள்<<>> அறிவிக்கப்பட்டன. அதில், ₹349 ரீசார்ஜ் திட்டத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆஃபரும் உள்ளது. இதற்கு முன்பு ஓராண்டாக இந்த பிளானில் ரீசார்ஜ் செய்தவர்கள், MY JIO ஆப்பில் இந்த முறை இலவசமாக ரீசார்ஜ் செய்யலாம். இன்றுடன் இந்த ஆஃபர் நிறைவடைகிறது. இந்த திட்டத்தில் 28 நாள்களுக்கு தினமும் 2GB டேட்டா, 100 SMS, Unlimited calls கிடைக்கும்.