News March 22, 2024
காகத்துக்கு உணவு வைத்தால் தீராத கடனும் தீரும்

காகத்துக்கு காலையில் உணவு வைத்தால் தீராத கடன் தொல்லை தீரும். நட்புக்கு இலக்கணமாக பார்க்கப்படும் காகம், ஆன்மீகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சனி பகவானின் வாகனமாகவும், முன்னோர்களின் வடிவமாகவும் காகம் பார்க்கப்படுகிறது. அத்தகைய காகத்துக்கு காலை நேரத்தில் எழுந்ததும் வீட்டில் உணவு வைத்தால் தீராத கடன் தொல்லை நீங்கும், முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
Similar News
News October 23, 2025
BREAKING: 14 மாவட்டங்களில் இன்று கனமழை

கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதேபோல், நாளை(அக்.24) கோவை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News October 23, 2025
2045-ல் விண்வெளியில் வசிப்போம்: ஜெப் பெசோஸ்

இன்னும் 20 வருஷம் தான். நாம் எல்லாரும் விண்வெளியில் வீடு கட்டிவிடுவோம் என்கிறார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ். 2045-க்குள் லட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள் என்று கணிக்கும் பெசோஸ், நிலவு மற்றும் பிற கோள்களில் ரோபோக்கள் வேலை செய்வார்கள் என்றும் கூறுகிறார். AI வேலைகளை பறிக்காது என்றும், அது சமூகத்திற்கு அதிக செழிப்பையே கொடுக்கும் எனவும் ஜெப் பெசோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News October 23, 2025
BREAKING: இந்திய அணி 264 ரன்கள் குவிப்பு!

ஆஸி.,க்கு எதிரான 2-வது ODI-ல் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 264/9 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக ரோஹித் 73 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 61 ரன்களும், அக்சர் படேல் 44 ரன்களும் அடித்து அவுட்டாகினர். ஆஸி., அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்களையும், பார்ட்லெட் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த ஸ்கோரை Defend செய்து வெற்றி பெறுமா இந்தியா?