News November 29, 2024

குமரி: ஒரு வாரத்தில் 339 பேரை நாய் கடித்ததாக தகவல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருக்களிலும் சாலைகளிலும் நாய்கள் அதிக அளவில் நடமாடுவதால் பொதுமக்களை அவை கடித்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாவட்டத்தில் 339 பேர்களை நாய்கள் கடித்துள்ளன. இதில் அதிகபட்சமாக தூத்தூரில் 25 பேரை நாய் கடித்துள்ளது. இந்த தகவலை கன்னியாகுமரி மாவட்ட கொள்ளை நோய் அலுவலர் டாக்டர் கிங்சால் இன்று(நவ.28) தெரிவித்தார்.

Similar News

News November 13, 2025

குமரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு விருது

image

தமிழக தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் 2004 – 2021 ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளாக குமரி மாவட்டத்தில் ஆலங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி, ஈத்தாமொழி அரசு தொடக்கப்பள்ளி, கடியப்பட்டணம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. நாளை (நவ.14) காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேடயம் வழங்குகிறார்.

News November 13, 2025

கன்னியாகுமரியில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில்

image

கோவில் நகரமான கன்னியாகுமரியில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில் இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. இது வருகிற டிச-7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து வாரணாசி புறப்பட்டு செல்கிறது. 13ம் தேதி வாரணாசியில் இருந்து கன்னியாகுமரிக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இதனை ரயில்வே நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.

News November 13, 2025

குமரி மாவட்ட கோர்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளதா?

image

சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பு:- தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுரைப்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் மாவட்ட, வட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் டிச.13ம் தேதி அன்று மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை முடிக்க விருப்பமுள்ளோர் நவ.24 ம் தேதிக்குள் நாகர்கோவில் சட்டப் பணிகள் குழுவில் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!