News November 29, 2024

குமரி: ஒரு வாரத்தில் 339 பேரை நாய் கடித்ததாக தகவல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருக்களிலும் சாலைகளிலும் நாய்கள் அதிக அளவில் நடமாடுவதால் பொதுமக்களை அவை கடித்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாவட்டத்தில் 339 பேர்களை நாய்கள் கடித்துள்ளன. இதில் அதிகபட்சமாக தூத்தூரில் 25 பேரை நாய் கடித்துள்ளது. இந்த தகவலை கன்னியாகுமரி மாவட்ட கொள்ளை நோய் அலுவலர் டாக்டர் கிங்சால் இன்று(நவ.28) தெரிவித்தார்.

Similar News

News August 6, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட். 6) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 41.30 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 67.81 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 10. 66 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 10.76 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 328 கன அடி, பெருஞ்சாணிக்கு 115 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

News August 6, 2025

குமரி இளைஞர்கள.. வன்கொடுமை தடுப்புக்குழு பதவி அறிவிப்பு!

image

நாகர்கோவில் R.D.O அளவில் ஆதிதிராவிடர் நலக்குழு, வன்கொடுமை தடுப்புக் குழு, மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் தடுப்பு குழு உறுப்பினர்களின் பதவிகாலம் முடிந்து விட்டது. இதற்கு புதிய உறுப்பினர்கள் பதவிக்கு நாகர்கோவில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட தன்னார்வலர்கள், நாகர்கோவில் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் மனுவை அளிக்கலாம் என குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE

News August 6, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 478 மனுக்கள்

image

சுருளகோடு புனித அந்தோணியார் உயர்நிலை பள்ளி வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் தரப்பில் மொத்தம் 478 மனுக்கள் பல்வேறு துறைகளுக்கு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை வட்டார வளர்ச்சி அலுவலர் சசி, வட்டடாட்சியர் சுந்தரவல்லி, முன்னாள் ஊராட்சி தலைவர் விமலாசுரேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

error: Content is protected !!