News November 28, 2024
வங்கிகளுக்கு திரும்பி வராத ₹1.70 லட்சம் கோடி கடன்

வங்கிகளிடம் திரும்ப செலுத்தப்படாத கடன், வாராக் கடன் எனப்படுகிறது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் மார்ச் வரையிலான இந்த நிதியாண்டில் வாராக்கடன் 18% குறைந்துள்ளது. அதாவது ₹2.08 லட்சம் கோடியிலிருந்து ₹1.70 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. இருப்பினும், PNB, கனரா, HDFC, BOI, இந்தியன் வங்கி, AXIS-இல் அக்கடன் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக PNB ₹18,317 கோடி வாராக்கடனுடன் முதலிடத்தில் உள்ளது.
Similar News
News December 7, 2025
RRB-யில் 161 பணியிடங்கள்.. ₹35,400 சம்பளம்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள தலைமை வணிக மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ➤காலியிடங்கள் 161 ➤கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ➤வயது: 18- 33 வரை ➤தேர்வு முறை: 2 நிலை கணினி தேர்வு ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.20 ➤முழு தகவலுக்கு இங்கே <
News December 7, 2025
சற்றுமுன் அதிரடி கைது

திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயனின் தஞ்சை வீட்டில் கடந்த வாரம் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில், தருமபுரியை சேர்ந்த ரசூல், சாதிக் பாஷா, மொய்தீன், பர்வீன் ஆகியோரை போலீசார் கைது செய்து, 87 சவரன் நகைகளை மீட்டுள்ளனர். மீதமுள்ள நகைகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
News December 7, 2025
அரசியலில் குதிக்கிறாரா விஜய் சேதுபதி?

’சீக்கிரமே ஓட்டு கேட்டு வரேன்’ என Bigg Boss-ல் கூறியிருந்தார் விஜய் சேதுபதி. இதனால் அவர் அரசியலுக்கு வரப்போகிறாரா என SM-ல் கேள்வி எழுந்தது. ஆனால், அந்த நோக்கத்தில் அவர் அதை சொல்லவில்லை. சனிக்கிழமை எபிசோடில் VJS-யிடம் BB Contestants பற்றி ஆடியன்ஸ் புகார் வைத்தனர். இதை கேட்ட VJS, ‘ஏதோ தொகுதி மக்களிடம் குறை கேட்டு வந்தது போல் இருப்பதாகவும், சீக்கிரமே ஓட்டு கேட்டு வரேன்’ எனவும் காமெடியாக சொன்னார்.


