News November 28, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு முதல் முதுகலை படிப்புவரை படித்துள்ள பழங்குடியினர் இளைஞர்களுக்கு ‘உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்’ என்ற தலைப்பில் 30.11.2024 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருமந்துறை அருகே கோவில் காடு கிராமத்தில் ஶ்ரீனித் இன்டர்நேஷனல் என்னும் மையத்தில் வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில்பங்கேற்று பயனடையுமாறு ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 9, 2025

கள்ளக்குறிச்சி: கர்ப்பிணி சென்ற வாகனம் விபத்து..

image

உளுந்தூர்பேட்டை அருகே இறைஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன்யா வயது (32). இவர் தனது மாமனார் சாமிதுரை என்பருடன் வேப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஏழு மாத கர்ப்பிணியான சுகன்யா, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 9, 2025

கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில் 360 பேர் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்பு நேற்று கிராம துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் சார்பில் சம்பள உயர்வு வேண்டியும், பணி நிரந்தரம் வேண்டியும் பொது வேலை நிறுத்தமும் சாலை மறியலும் ஈடுபட்டனர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக 360 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

News December 9, 2025

கள்ளக்குறிச்சி: மனமுடைந்த மதுபிரியர் விபரீத முடிவு!

image

கள்ளக்குறிச்சி: புத்தந்தூரை சேர்ந்த பெரியசாமி குடிப்பழக்கம் கொண்டவர். இவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை பார்த்த அவரது உறவினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பெரியசாமி நேற்று தனது விவசாய நிலத்தில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!