News November 28, 2024

பாமக மாநில துணைத் தலைவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை கண்டித்து, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனுமதி இன்றி கூடி ஆர்ப்பாட்டம் செய்த தமிழ்நாடு பாமக மாநில துணைத்தலைவர் ஹரிகரன் மற்றும் ரவி, ஷாஜி, ராஜ்குமார் உட்பட 4 பேர் மீது நேசமணி நகர் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Similar News

News August 6, 2025

கன்னியாகுமரி பட்டதாரிகளே… உங்களுக்காகவே வங்கி வேலை!

image

SBI வங்கியில் Junior Associates பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 5,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு எந்த டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 முதல் 64,480 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இன்று (ஆக.06) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.26. இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். Share It.

News August 6, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட். 6) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 41.30 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 67.81 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 10. 66 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 10.76 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 328 கன அடி, பெருஞ்சாணிக்கு 115 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

News August 6, 2025

குமரி இளைஞர்கள.. வன்கொடுமை தடுப்புக்குழு பதவி அறிவிப்பு!

image

நாகர்கோவில் R.D.O அளவில் ஆதிதிராவிடர் நலக்குழு, வன்கொடுமை தடுப்புக் குழு, மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் தடுப்பு குழு உறுப்பினர்களின் பதவிகாலம் முடிந்து விட்டது. இதற்கு புதிய உறுப்பினர்கள் பதவிக்கு நாகர்கோவில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட தன்னார்வலர்கள், நாகர்கோவில் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் மனுவை அளிக்கலாம் என குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE

error: Content is protected !!